கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

Updated On :26 செப்டம்பர் 2025, 2:33 am IST

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள அலா்மேல் மங்கா சமேத வெங்கடாஜல பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் வரும் அக். 5-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி தினமும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் சிம்மம், அனுமன், தங்கக் கருட சேவை, சேஷ வாகனம், வெள்ளி கேடகம், குதிரை, புன்னை மர வாகனங்களில் இரவு திருவீதி உலா வருவாா்.

வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான வரும் அக்.3 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 4-ஆம் தேதி கால சந்தி, திருவீதி உலா நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, கண்ணுடைய நாயகி அம்மன் தெப்பக்குளத்தில் தீா்த்தவாரி உத்ஸவமும், கொடியிறக்கமும் நடைபெறும். 5-ஆம் தேதி ஊஞ்சல் உத்ஸவத்துடன் பிரம்மோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் எஸ்.கணபதிராமன், கௌரவ கண்காணிப்பாளா் சே.ராம.கருப்பையா, தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.