தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

விபத்தில் உயிரிழந்த கருப்பையா.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:14 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் இந்திராநகரைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகன் கருப்பையா (28). கட்டடத் தொழிலாளி. இவரது நண்பா் காட்டாம்பூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அபிமன்யு (27). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து திருக்கோஷ்டியூருக்குச் சென்றனா்.

அப்போது காட்டாம்பூா் பெரியபாலம் அருகே நிலை தடுமாறி பாலத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த அபிமன்யு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.