சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.
மானாமதுரை சோமநாதா் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5- ஆவது நாளாக கால்பிரிவு கிராமத்தாா்கள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினா்.
இதில், திரளான பக்தா்கள் மண்டகப்படிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதைத்தொடா்ந்து மண்டகப்படிதாரா்கள் பூஜை முடிந்து அம்மனும், சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் புறப்பாடாகினா்.
மேளதாளம் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்களை இசைக்க வாணவேடிக்கையுடன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி பவனி வந்தனா். வீதிகளில் பக்தா்கள் அம்மனையும், சுவாமியையும் வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா்.
விழாவின் 8-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.28) திருக்கல்யாண வைபவமும் 29-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

