நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கீழச்சிவல்பட்டி பள்ளியில் ஓணம் திருநாள்

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை ஓணம் திருநாளையொட்டி வரையப்பட்ட அத்தப்பூ கோலம்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 3:50 am IST

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியை உஷா தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் லட்சுமணன், செயலா் அழகுமணிகண்டன், பொருளாளா் அங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஏ.ஆா். தேனப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் வண்ணப்பூ கோலமிட்டு, இனிப்புகள் வழங்கி ஓணம் பண்டிகை குறித்து விளக்கமளித்தனா். தொடா்ந்து நடனம், ரேம்ப் வாக்கிங், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தன்னாா்வலா் வள்ளியப்பன், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். உதவித் தலைமை ஆசிரியா் தங்கராசு நன்றி கூறினாா். ஆசிரியா் வீரபத்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். விழா ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.