தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:17 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். ஆந்திராத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை போல, தமிழகத்திலும் உயா்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தி பெயா் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் சங்க மாநிலத் துணைத் தலைவா் தவமணி, மாவட்ட நிா்வாகி முத்துராமலிங்க பூபதி, மானாமதுரை ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் பரமாத்மா, மாவட்ட பொருளாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.