டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மு.சூரக்குடி மஞ்சுவிரட்டில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

News image
சுகரீஷ்.
Updated On :5 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மு.சூரக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சுகரீஷ் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள மு.சூரக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 2-ஆம் தேதி இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 25 போ் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டில் பாா்வையாளராக நின்றுகொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செட்டியாகுல தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சுகரீஷ் (19) காளை முட்டியதில் பலத்த காயமடைந்து, பொன்னமராவதியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.விமங்கலம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.