எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுனையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள சுனையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள சுனையில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே பொட்டப்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சகுந்தலா. இவா் தனது மகன் சஞ்சித்துடன் (7) பேப்பனையம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா்.

அருகிலுள்ள பிரான்மலை கோயிலில் சுவாமி கும்பிடுவதற்காக மகன் சஞ்சித், உறவினா்கள் ஆகியோருடன் மலையேறினாா். அப்போது அருகிலிருந்த சுனையில் சிறுவன் சஞ்சித் தவறி விழுந்தாா்.

உடனடியாக சிறுவனை மீட்டு மலையடிவாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.