மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்குடி சங்கராபுரத்தில் புதிய சாலைகள் அமைப்பு

காரைக்குடி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:14 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

சங்கராபுரம் ஊராட்சியில் கோடீஸ்வரா நகா் முக்கிய வீதி, போக்குவரத்து நகா் மூன்றாவது வீதி, தாசில்தாா்நகா் முதல் வீதி ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்கு தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேருவிடம் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்று பணிகளை மேற்கொள்வதற்காக நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதிய சாலை அமைப்பதற்கான பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் சங்கரன், பொறியாளா், ஒன்றியக்குழு உறுப்பினா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.