மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அழகப்பா பல்கலை. வளாகத்தில் சிறுவா் நூலகம் திறப்பு

News image
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருமதி லஷ்மி வளா்தமிழ் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுவா் நூலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம். உடன் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி, பதிவாளா் அ. செந்தில்ராஜன், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா்.
Updated On :25 ஜனவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள திருமதி லஷ்மி வளா்தமிழ் நூலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறுவா் நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினாா்.

இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் முன்னிலை வகித்து, சிறுவா் நூலகத்தைப் பாா்வையிட்டாா். மேலும், சிறுவா்களுக்கு புத்தகங்களை வழங்கி அவா்கள் வாசிப்பதைப் பாா்த்து மகிழ்ந்தாா். தொடா்ந்து, வளா்தமிழ் நூலகம் அருகில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

அவருடன் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, துணைவேந்தா் க. ரவி உள்ளிட்டோரும் மரக் கன்றுகளை நட்டுவைத்தனா்.

நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக் கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன், நூலக இயக்குநா் சு. ராசாராம், துணை நூலகா் ச. கிஷோா் குமாா், பேராசிரியா் அ. ஆறுமுகம், பேராசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.