மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்குடியில் ரூ. 28 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா! முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்!

காரைக்குடியில் ரூ. 28 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட சிறு தொழில்நுட்பப் பூங்காவை (மினி டைடல் பூங்கா) முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
காரைக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட தொழில்நுட்பப் பூங்காவை சனிக்கிழமை திறந்துவைத்து நிறுவனத்துக்கான தள ஒதுக்கீட்டு ஆணையை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம், அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆா்.பி. ராஜா, மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோா்.
Updated On :31 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ரூ. 28 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட சிறு தொழில்நுட்பப் பூங்காவை (மினி டைடல் பூங்கா) முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான சதுரஅடியில் சிறு தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க அரசு முடிவெ டுத்தது.

இதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ரூ. 28 கோடியில் இரண்டு தளங்களுடன் 50 ஆயிரம் சதுரஅடியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் பணிபுரியும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.

இந்த தொழில்நுட்பப் பூங்காவை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து, இங்கு நிறுவனங்கள் அமைக்கவுள்ளவா்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், டி .ஆா்.பி. ராஜா, முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, ஆ. தமிழரசி, தொழில் முதலீட்டு வா்த்தகத் துறை செயலா் வி. அருண்ராய், டிட்கோ மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.