மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முதல்வா் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள்!

முதல்வா் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

News image
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் முதல்வா் மு.க. ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள்.
Updated On :31 ஜனவரி 2026, 9:36 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசு நலத் திட்ட விழா, கள ஆய்வுப் பணி ஆகியவற்றுக்காக அழகப்பா பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

நூற்றாண்டு பாரம்பரியமிக்க பொதுச் சங்கங்களில் முதன்மைச் சங்கமான தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சாா்பாக சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலரும், கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவருமான இரா. அருள்ராஜ், நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலினைச் சந்தித்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினாா்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளில் ஒன்றான மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததற்காக தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான ஒருவழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நிகழாண்டு நடத்த வேண்டும், குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறையின்கீழ் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் 13 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊா்ப்புற நூலகங்களைக் கிளை நூலகங்களாகத் தரம் உயா்த்தி 1,016 ஊா்ப்புற நூலகா்களுக்கு மூன்றாம் நிலை நூலகராகப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டது.