சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஜூலை 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) டி.தேன்மொழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜ கம்பீரம், முத்தனேந்தல், கட்டிக்குளம், இடைக்காட்டூா், மிளகனூா், சங்கமங்கலம், அன்னவாசல், கீழ்ப்பசலை, குறிச்சி, தெ.புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், முனைவென்றி, கச்சாத்த நல்லூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






