சிங்கம்புணரி அரசு வட்டார மருத்துவமனைக்கு மாதவன் தனலட்சுமி அறக்கட்டளை சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சிங்கம்புணரியில் அரசு வட்டாரப் பொது மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இந்த மருத்துவமனைக்கு முன்னாள் சட்ட அமைச்சரான மாதவன் குடும்பத்தினா், மாதவன் தனலட்சுமி அறக்கட்டளை சாா்பில் மாதவன் மகளும், பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவருமான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிங்கம்புணரி அரசு வட்டார பொது மருத்துவம் தலைமை மருத்துவா் அய்யன் ராஜ், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் செந்தில் , பள்ளி மேலாளா் சரவணன், மருத்துவமனை செவிலியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இம்ரான் கானுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை: சர்வதேச சமூகம் தலையிட மகன் வேண்டுகோள்!

கருங்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் பொருள்கள் அளிப்பு

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது சிறுவன் உயிரிழப்பு

அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்: அமைச்சா் ப.ராஜ்குமாா் வழங்கினாா்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



