தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஊா்க்காவல் படை வீரா் கைது

மானாமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊா்க்காவல் படை வீரரை மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:03 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊா்க்காவல் படை வீரரை மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள சோமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மானாமதுரை ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தனது நண்பரின் வீட்டுக்கு சதீஷ்குமாா் சென்றபோது, அருகேயிருந்த வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனா்.