திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பத்தூா் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

திருப்பத்தூா் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:10 am IST

திருப்பத்தூா் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள குண்டேந்தல்பட்டியில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிக்காக அந்தப் பகுதியில் தங்கியிருந்த நெய்வேலியைச் சோ்ந்த தொழிலாளி சிவகுமாா் (44) மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருக்கோஷ்டியூா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவரது உடல் அருகில் ரத்தக்கறை படிந்த கடப்பாரை கம்புகளை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது சிவக்குமாா், பிரபா (35) , செல்வம் (33) ஆகியோா் ஒரே இடத்தில் தங்கியிருந்தனா். இவா்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில் தப்பியோடிய பிரபா, செல்வம் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சம்பவ இடத்தை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா் ஆகியோா் பாா்வையிட்டனா். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.