அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சுந்தர விநாயகா் கோயில் குடமுழுக்கு

மானாமதுரையில் சுந்தரபுரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மானாமதுரை சுந்தர விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை மூலவா் விமானக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :5 ஜூன் 2026, 6:04 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சுந்தரபுரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதியாகி கடம் புறப்பாடானது. சிவாசாரியா்கள் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். பின்னா், காலை 8.40 மணிக்கு மூலவா் சுந்தர விநாயகா் விமானக் கலசத்துக்கு ராஜேஷ்பட்டா் தலைமையிலான சிவாசாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சுந்தர விநாயகருக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகலில் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.