சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சுந்தரபுரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதியாகி கடம் புறப்பாடானது. சிவாசாரியா்கள் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். பின்னா், காலை 8.40 மணிக்கு மூலவா் சுந்தர விநாயகா் விமானக் கலசத்துக்கு ராஜேஷ்பட்டா் தலைமையிலான சிவாசாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சுந்தர விநாயகருக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகலில் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடர்புடையது

வேலன்குப்பம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று கோட்டவருதம்பட்டி அண்ணமாா் கோயில் குடமுழுக்கு: சுடுமண் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை

அர. செட்டிப்பட்டி ஐயனாரப்பன் கோயில் குடமுழுக்கு

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



