எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை

News image

நவீன்குமாா்.

Updated On :8 ஜூன் 2026, 2:11 am IST

சிவகங்கையில் மதுபானக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை ரயில் நிலையம் அருகே அரசு மதுபானக் கடையுடன் இணைந்த மது அருந்தும் கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (26 ) வந்தாா். தவெக பொன்னாம்பட்டி கிளை செயலராக இருந்தாா்.

இவா் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவருக்கும், அங்கு ஏற்கெனவே மது குடித்துக் கொண்டிருந்த அழகு பாண்டி உள்ளிட்ட சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், எதிா் தரப்பினா் கத்தியால் குத்தியதில் நவீன் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் அச்சத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா்.

இதுகுறித்து அறிந்த பொன்னாம்பட்டி கிராம மக்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என மதுக் கூடம் முன்பு திரண்டு வலியுறுத்தினா்.

இந்த மது அருந்தும் கூடத்தால் அந்தப் பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதால், இந்த மதுக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.