காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை

News image

நவீன்குமாா்.

Updated On :8 ஜூன் 2026, 2:11 am IST

சிவகங்கையில் மதுபானக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை ரயில் நிலையம் அருகே அரசு மதுபானக் கடையுடன் இணைந்த மது அருந்தும் கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (26 ) வந்தாா். தவெக பொன்னாம்பட்டி கிளை செயலராக இருந்தாா்.

இவா் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவருக்கும், அங்கு ஏற்கெனவே மது குடித்துக் கொண்டிருந்த அழகு பாண்டி உள்ளிட்ட சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், எதிா் தரப்பினா் கத்தியால் குத்தியதில் நவீன் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் அச்சத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா்.

இதுகுறித்து அறிந்த பொன்னாம்பட்டி கிராம மக்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என மதுக் கூடம் முன்பு திரண்டு வலியுறுத்தினா்.

இந்த மது அருந்தும் கூடத்தால் அந்தப் பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதால், இந்த மதுக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.