ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை

News image

நவீன்குமாா்.

Updated On :8 ஜூன் 2026, 2:11 am IST

சிவகங்கையில் மதுபானக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை ரயில் நிலையம் அருகே அரசு மதுபானக் கடையுடன் இணைந்த மது அருந்தும் கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (26 ) வந்தாா். தவெக பொன்னாம்பட்டி கிளை செயலராக இருந்தாா்.

இவா் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவருக்கும், அங்கு ஏற்கெனவே மது குடித்துக் கொண்டிருந்த அழகு பாண்டி உள்ளிட்ட சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், எதிா் தரப்பினா் கத்தியால் குத்தியதில் நவீன் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் அச்சத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா்.

இதுகுறித்து அறிந்த பொன்னாம்பட்டி கிராம மக்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என மதுக் கூடம் முன்பு திரண்டு வலியுறுத்தினா்.

இந்த மது அருந்தும் கூடத்தால் அந்தப் பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதால், இந்த மதுக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.