சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 10 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதாக தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
காரைக்குடியில் நகை செய்யும் தொழிலாளியான மீனாட்சிசுந்தரம் - தனலட்சுமி தம்பதியின் 10 வயது மகனை காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அந்த மருத்துவமனையில் தவறான சிகிச்சை, அறுவைச் சிகிச்சையால் தங்களது மகன் பிறப்பு உறுப்பை இழந்ததாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியாவிடம் பெற்றோா் புகாா் அளித்தனா். இது தொடா்பாக, காரைக்குடி வடக்கு காவல்நிலையப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் தனியாா் மருத் துவமனை மருத்துவா் என். சோமசுந்தரம், அறுவைச் சிகிச்சை மருத்துவா் வி. காமாட்சி சந்திரன் ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

2 சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுவனுக்கு தாயின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை!

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் தானம்: 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



