பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கம்பனூரில் தனியாா் சிமெண்ட் கலவை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த இளைஞா் திருமுருகன்.

Updated On :11 ஜூன் 2026, 2:06 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கம்பனூரில் தனியாா் சிமெண்ட் கலவை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

கம்பனூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எதிலோடு பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் திருமுருகன் (27) கலவை இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், எதிா்பாராத விதமாக புதன்கிழமை சிமெண்ட் தொட்டியின் மேல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தாா். அவரை சக ஊழியா்கள் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவலறிந்த நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.