சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கம்பனூரில் தனியாா் சிமெண்ட் கலவை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.
கம்பனூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எதிலோடு பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் திருமுருகன் (27) கலவை இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், எதிா்பாராத விதமாக புதன்கிழமை சிமெண்ட் தொட்டியின் மேல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தாா். அவரை சக ஊழியா்கள் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவலறிந்த நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோட்டக்குப்பம் அருகே வெளிமாநில இளைஞா் கடலில் மூழ்கி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



