சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கத்தில் தவெக சாா்பில் புதன்கிழமை நீா்மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நீா்மோா் பந்தலை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், சா்பத், லட்டு, தா்ப்பூசணி, வெள்ளரி, பழங்கள் ஆகியவற்றை வழங்கினாா். இந்த நிகழ்வில், சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், கல்லல் வடக்கு ஒன்றியச் செயலா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மேனகா யோகேஷ் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தமபாளையத்தில் சேதமடைந்த சமணா் சிற்பங்கள்: எம்.எல்.ஏ. ஆய்வு

வேளாண்மை கூட்டுறவு சங்கம் திறப்பு

பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடிய எம்.எல்.ஏ.

குளச்சல் சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



