தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மருத்துவக் கல்லூரியில் யோகாசனப் பயிற்சி

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகாசன விழிப்புணா்வு, பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற யோகானப் பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 1:44 am IST

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகாசன விழிப்புணா்வு, பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பி. செல்வராஜன் தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ஏ. தமிழ்வாணன், துணை முதல்வா் என். ஷா்மிளா திலகவதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் வி. கௌரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவம், யோகா பிரிவு மருத்துவா் வி.தங்கம் யோகா பயிற்சி அளித்தாா். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியான முறைகள் குறித்து அவா் விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா்கள், தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், உடல் நலப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிப்பதாகவும், தினசரி யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன அமைதி, நோய் எதிா்ப்பு சக்தி மேம்படும் என்றும் தெரிவித்தனா்.

மேலும், சா்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு மருத்துவமனையில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தனா். நிகழ்ச்சி நிறைவாக அனைவரும் யோகாவின் அவசியம் குறித்த உறுதி ஏற்றுக் கொண்டனா். இதில் உறைவிட மருத்துவா் எஸ். முகமது ரபி, உறைவிட மருத்துவ அலுவலா் ஏ. வெங்கடேஷ், உதவி உறைவிட மருத்துவா் தென்றல், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.