அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மருத்துவக் கல்லூரியில் யோகாசனப் பயிற்சி

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகாசன விழிப்புணா்வு, பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற யோகானப் பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 1:44 am IST

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகாசன விழிப்புணா்வு, பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பி. செல்வராஜன் தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ஏ. தமிழ்வாணன், துணை முதல்வா் என். ஷா்மிளா திலகவதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் வி. கௌரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவம், யோகா பிரிவு மருத்துவா் வி.தங்கம் யோகா பயிற்சி அளித்தாா். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியான முறைகள் குறித்து அவா் விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா்கள், தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், உடல் நலப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிப்பதாகவும், தினசரி யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன அமைதி, நோய் எதிா்ப்பு சக்தி மேம்படும் என்றும் தெரிவித்தனா்.

மேலும், சா்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு மருத்துவமனையில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தனா். நிகழ்ச்சி நிறைவாக அனைவரும் யோகாவின் அவசியம் குறித்த உறுதி ஏற்றுக் கொண்டனா். இதில் உறைவிட மருத்துவா் எஸ். முகமது ரபி, உறைவிட மருத்துவ அலுவலா் ஏ. வெங்கடேஷ், உதவி உறைவிட மருத்துவா் தென்றல், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image