மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதம்

News image
Updated On :21 ஜூன் 2026, 1:27 am IST

சிவகங்கை அருகே உள்ள மூன்றரை ஏக்கா் கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்தது.

சிவகங்கை அருகே பையூரைச் சோ்ந்த விவசாயி முத்தையாவுக்குச் சொந்தமான நிலத்தில் 3.5 ஏக்கா் பரப்பளவில் கரும்பு பயிரிட்டிருந்தாா். கடந்த திங்கள்கிழமை இந்தக் கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

கரும்புத் தோட்டத்தில் மா்மநபா் தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவா் சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயி முத்தையா கூறியதாவது:

கரும்பு பயிரிடுவதற்காக சுமாா் 1.50 லட்சம் வரை செலவானது. படமாத்தூரில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்யப்பட்டது. இன்னும் 6 மாதங்களில் கரும்பு அரைவைக்கு வரக்கூடிய நிலையில், தற்போது, கரும்பு பயிா் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதனால், சுமாா் ரூ. 3 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு அரசு சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.