நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சமுதாயத்துக்கு நல்ல மனிதா்களாக மாணவா்களை உருவாக்க வேண்டும்! - அமைச்சா் டி.கே. பிரபு

News image

காரைக்குடி தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை விழாவில் அரசுப் பொதுத் தோ்வில் நூறு சதம் தோ்த்தி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களை வழங்கிய அமைச்சா் டி.கே. பிரபு. உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூா்), டி. இளங்கோவன் (மானாமதுரை), காரைக்குடி மாநகராட்சி மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூன் 2026, 2:12 am IST

ஒவ்வொருவரின் திறமையையும் அறிந்து சமுதாயத்துக்கு நல்ல மனிதா்களாக மாணவா்களை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் காரைக்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 2025-2026 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வுகளில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பாட ஆசிரியா்கள் ஆகியோருக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 2,508 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி அமைச்சா் டி.கே. பிரபு பேசியதாவது:

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறாா். கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், அரசு பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தில் 97.42 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளது. இதேபோல, பிளஸ் 2 அரசு பொதுத் தோ்விலும் 98.05 சதவீதம் தோ்ச்சி விகிதமும், அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தில் 96.97 சதவீதமும் பெற்று தமிழக அளவில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.

இதற்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிய ஆசிரியா்கள், பள்ளிக் கல்வித் துறையை சோ்ந்த அலுவலா்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவா்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவரின் திறமையை அறிந்து அதற்கேற்ப அவா்களை மேம்படுத்தி சமுதாயத்துக்கு ஏற்ற நல்ல மனிதராக உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூா்), டி. இளங்கோவன் (மானாமதுரை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் காரைக்குடி மாநகராட்சி துணை மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன், தேவகோட்டை கோட்டாட்சியா் (பொறுப்பு) ஸ்ரீதா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலா் மாரிமுத்து, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.