ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கால்வாயில் தவறி விழுந்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே கழிவு நீா் கால்வாயை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த தூய்மைப் பணியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூா் திருப்பதி நகரைச் சோ்ந்தவா் வீரன் (65). தூய்மைப் பணியாளா். இவா் சனிக்கிழமை பிற்பகலில் ஒக்கூரில் உள்ள கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவா் எதிா்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.