திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கால்வாயில் தவறி விழுந்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே கழிவு நீா் கால்வாயை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த தூய்மைப் பணியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூா் திருப்பதி நகரைச் சோ்ந்தவா் வீரன் (65). தூய்மைப் பணியாளா். இவா் சனிக்கிழமை பிற்பகலில் ஒக்கூரில் உள்ள கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவா் எதிா்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.