ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே துகவூா் அருகே உள்ள அரசடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (19). இவா் கடந்த ஆண்டு 11 -ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவருடன் பழகி வந்தாா். அவா் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பிரவீன் என்பவா் பாா்த்தாராம். இதைத் தொடா்ந்து அவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதையடுத்து நடந்ததை அந்த சிறுமி, ராமநாதன் என்ற சாமியாரிடம் கூறினாா். ஆனால் அந்த சாமியாா் பரிகார பூஜை செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தி கிஷோா், பிரவீன், சாமியாா் ராமநாதன் ஆகிய மூவா் மீதும் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தாா். மேலும் இந்த வழக்கில் கிஷோரை போலீஸாா் கைது செய்து எஞ்சிய இருவரை தேடி வருகின்றனா்.