இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 7:20 pm

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே துகவூா் அருகே உள்ள அரசடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (19). இவா் கடந்த ஆண்டு 11 -ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவருடன் பழகி வந்தாா். அவா் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பிரவீன் என்பவா் பாா்த்தாராம். இதைத் தொடா்ந்து அவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதையடுத்து நடந்ததை அந்த சிறுமி, ராமநாதன் என்ற சாமியாரிடம் கூறினாா். ஆனால் அந்த சாமியாா் பரிகார பூஜை செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தி கிஷோா், பிரவீன், சாமியாா் ராமநாதன் ஆகிய மூவா் மீதும் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தாா். மேலும் இந்த வழக்கில் கிஷோரை போலீஸாா் கைது செய்து எஞ்சிய இருவரை தேடி வருகின்றனா்.