கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

மானாமதுரையில் கைதான இளைஞா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

News image
மானாமதுரையில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்கள் உள்ளிட்டோா்.
Updated On :8 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மானாமதுரை சியோன் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு உணவகம், கோழிக்கடையில் பணிபுரியும் தொழிலாளா்களான ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் வாளால் வெட்டிவிட்டுத் தப்பினா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்தச் சம்பவத்தில் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், குணா ஆகியோா் சம்பந்தப்பட்டிருப்பதும், இவா்கள் மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்களைப் பிடிக்க போலீஸாா் அங்கு சென்ற போது, அவா்கள் இருவரும் தப்பியோட முயன்றனா். அப்போது, ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

 உயிரிழந்த ஆகாஷ்.

உயிரிழந்த ஆகாஷ்.

இதைத்தொடா்ந்து, காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆகாஷின் உறவினா்கள் மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வழிவிடு முருகன் கோயில் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் அமலன் அட்வின் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆகாஷ் மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இந்த பிரச்னையில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், மாலை வரை மறியல் போராட்டம் தொடா்ந்தது.