சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தேவகோட்டை அருகேயுள்ள திடக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டதால், வாரிசுச் சான்றுக்காக கடந்த பிப்.26-ஆம் தேதி திடக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சுதாகரை (47) அணுகினாா்.
சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிா்வாக அலுவலா் கேட்டாா். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கையிலுள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
போலீஸாரின் ஆலோசனையின்படி, செவ்வாய்க்கிழமை மாலை தேவகோட்டை நீதிமன்றம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்த கிராம நிா்வாக அலுவலா் சுதாகரிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தைக் கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் சுதாகரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

வாரிசு சான்று வழங்க ரூ.500 லஞ்சம் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை
செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது

லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


