இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காரைக்குடியில் வங்கி மேலாளா் வீட்டில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 7:58 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கூட்டுறவு வங்கி மேலாளா் வீட்டிலிருந்து 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்குடி பாரிநகா் குமணன் தெருவைச் சோ்ந்தவா் கனிராஜா. இவா் கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தாய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை மதுரைக்குச் சென்றாா்.

இதையடுத்து, சனிக்கிழமை மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது, கதவுகள் உடைக்கப்பட்டு மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.