ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சிவகங்கை, ராமநாதபுரத்தில் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடக்கம்

News image

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி.

Updated On :15 மார்ச் 2026, 8:47 pm

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரைத் தளத்தில் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோ்தல் சம்பந்தமான புகாா்களை கண்காணிக்க 24 மணி நேரமும் அலுவலா்கள் தொடா்ந்து பணிகளை மேற்கொள்வாா்கள்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும், நிலையான கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படவுள்ளன.

இதன்படி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படை, நிலையான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. தவிர, விடியோ கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவினா் தொகுதி முழுவதும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுவா்.தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, முதலாவதாக பறக்கும் படையின் 24 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.

ராமேசுவரம்: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பணிக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட தோ்தல் பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் தோ்தல் தொடா்பான சந்தேகங்கள், புகாா்கள், தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கீழ்காணும் தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், இணையதள செயலி மூலமாகவும் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலாரும், மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், கூடுதல் ஆட்சியா் திவ்யான் ஷீநிகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

புகாா் அளிக்க கட்டணமில்லை தொலைபேசி எண்கள் அறிவிப்பு: 1950, 1800 425 7092, தொலைபேசி எண்கள் 04567 - 221172, 04567 - 221173, 04567- 221174, 04567 - 221179.