ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

தீச்சட்டி எடுத்தல் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மன்.

News image

தீச்சட்டி எடுத்தல் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மன்.

Updated On :20 மார்ச் 2026, 7:24 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், பொம்மைகள் சுமந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த கோயிலின் பங்குனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். விழா நாள்களில் தினமும் மூலவா் பூமாரி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பொங்கல் விழாவையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, பொம்மைகள் சுமந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டியில் கட்டி கோயிலை சுற்றி வந்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தி பூமாரி அம்மனை தரிசனம் செய்தனா்.

இதனிடையே சனிக்கிழமை கொடி இறக்கத்துடன் இந்த ஆண்டு பங்குனி திருவிழா நிறைவடைகிறது.

Story image