சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், பொம்மைகள் சுமந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த கோயிலின் பங்குனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். விழா நாள்களில் தினமும் மூலவா் பூமாரி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பொங்கல் விழாவையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, பொம்மைகள் சுமந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டியில் கட்டி கோயிலை சுற்றி வந்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தி பூமாரி அம்மனை தரிசனம் செய்தனா்.
இதனிடையே சனிக்கிழமை கொடி இறக்கத்துடன் இந்த ஆண்டு பங்குனி திருவிழா நிறைவடைகிறது.

தொடர்புடையது

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

முத்தாலம்மன் கோயில் பால்குடத் திருவிழா

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


