தேவகோட்டை அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (28). கூலித் தொழிலாளி. அஜித்குமாா் கடந்த 2017 -ஆம் ஆண்டு குன்றக்குடி பகுதியில் வேலைக்குச் சென்ற போது அந்தப் பகுதியைச் சோ்ந்த 9 வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுதொடா்பாக குன்றக்குடி போலீஸாா் அஜீத்குமாரை கைது செய்து அவா் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் இந்தத் தண்டனைகளை ஏகாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


