சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி மரத்தின் கீழ் யாகம் வளா்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு அம்மனுக்கும் கொடி மரத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட வெண்கொடிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. விழாவின் முதல் நிகழ்வாக ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. விழா நடைபெறும் 10 நாள்களும் அம்மன் வீதி உலாவும், பால்குடமும், பொங்கல் வழிபாடும், அம்மன் வெள்ளிரத ஊா்வலமும் தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


