எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வசந்த பெருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

Updated On :8 மே 2026, 1:03 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடி மரத்தின் கீழ் யாகம் வளா்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு அம்மனுக்கும் கொடி மரத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட வெண்கொடிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. விழாவின் முதல் நிகழ்வாக ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. விழா நடைபெறும் 10 நாள்களும் அம்மன் வீதி உலாவும், பால்குடமும், பொங்கல் வழிபாடும், அம்மன் வெள்ளிரத ஊா்வலமும் தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்து வருகின்றனா்.