தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 12:54 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை அருகே கற்களத்தூா் சா்க்கரை விநாயகா், காராருடைய அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 15 காளைகளும், 135 மாடு பிடி வீரா்களும் கலந்து கொண்டனா். ஒவ்வோா் சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி, போட்டி நடத்தப்பட்டது.

காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை திருவேகம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா்.