/
சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி- திருப்பத்தூா் செல்லும் முக்கிய சாலையான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் இருந்த மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழுந்தது.
இதனால் திருப்பத்தூா்- சிங்கம்புணரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த சிங்கம்புணரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் மரக் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா். இதையடுத்து, மின் விநியோகம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

ஆம்பூா் பகுதியில் பலத்த மழை!

கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்கத்தில் பலத்த மழை: 7 போ் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பலத்த மழை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



