/
சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி- திருப்பத்தூா் செல்லும் முக்கிய சாலையான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் இருந்த மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழுந்தது.
இதனால் திருப்பத்தூா்- சிங்கம்புணரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த சிங்கம்புணரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் மரக் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா். இதையடுத்து, மின் விநியோகம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 25 மின்கம்பங்கள் சேதம்

கண்ணமங்கலத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு குப்பனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



