வீரபாண்டி அருகே கணவர் குடிப் பழக்கத்துக்கு ஆளானதால் மன வருத்தத்தில் இருந்த மனைவி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மாணவி இறந்தார்.
வீரபாண்டி அருகே வயல்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள். கூலித் தொழிலாளியான முருகன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம்.
இதனால் வருத்தத்தில் இருந்த மனைவி தனது 2 ஆவது மகள் 10 ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வினிக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், அஸ்வினி உயிரிழந்தார். வீரபாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








