விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சோலார் பேட்டரி திருடிய சிறுவன் கைது

போடியில், பேரூராட்சிக்கு சொந்தமான சோலார் பேட்டரியை திருடிய சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:01 am

DIN

போடியில், பேரூராட்சிக்கு சொந்தமான சோலார் பேட்டரியை திருடிய சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 போடியை அடுத்துள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பல இடங்களில் சோலார் மின் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போடி கிருஷ்ணா நகரில் 7 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தெரு விளக்குகள் எரியவில்லை. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது சோலார் மின் தெருவிளக்குகளில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதனிடையே போடி வினோபாஜி காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த பேட்டரிகளை விற்க முயன்றது தெரிந்தது.  இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.