வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தேனியில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

தேனியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு  சார்பில் புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:44 am

DIN

தேனியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு  சார்பில் புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி, ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செந்தில்குமார் ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தேனி சார்பு நீதிபதி ஜெயராஜ், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் குமரசேன், தேனி வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.முத்துராமலிங்கம், தேனி சிறப்பு அரசு வழக்குரைஞர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியகுளம் சாலையில் உள்ள பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. தேனியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சட்ட விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகை ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகளை ஆணைக் குழு நிர்வாக உதவியாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.