அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேனியில் தமிழில் சிறந்த வரைவுகள் எழுதிய அரசுத் துறை பணியாளர்களுக்கு பரிசு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கில், மாவட்டத்தில் தமிழில் சிறந்த

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:44 am

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கில், மாவட்டத்தில் தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுத் துறை பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கிற்கு, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வெ.குமார், புலவர்.வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆட்சியரின் சிறுசேமிப்புத் துறை நேர்முக உதவியாளர் அலுவலகம், ஆட்சி மொழி திட்ட செயல்பாட்டில் சிறந்து விளங்கிய அலுவலகத்திற்கான பரிசு மற்றும் கேட்டயம் வென்றது.
அலுவலக செயல்பாடுகளில் தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதியதற்காக பெரியகுளம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்
அலுவலக உதவியாளர் சரவணன் முதலிடம், ஊரக வளர்ச்சி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் முருகதாஸ் 2-ஆம் இடம், பெரியகுளம் கூட்டுறவு தணிக்கை
உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் 3-ஆம் இடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பெற்ற பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.