/

ஆண்டிபட்டியில் குடிநீர் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி  பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :29 மார்ச் 2018, 7:51 pm

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி  பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி 13-வது வார்டில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இதனையடுத்து வியாழக்கிழமை காலை தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சக்கம்பட்டியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனே தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலந்து சென்றனர்.         
இதனால் ஆண்டிபட்டி - தேனி தேசியநெடுஞ்சாலையில் சுமார் அரைமணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.