வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை அணை யின் நீர்மட்டம் 60.63 அடியாக உயர்ந்திருந்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த செப்.30 ஆம் தேதி முதல் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,600 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து 60.63 அடியாக உள்ளது (அணை உயரம் 71 அடி).
அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 3,159 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 3,692 மில்லியன் கன அடி. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு விநாடிக்கு 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 132.80 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 3,025 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5,352 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


