ஆண்டிபட்டி அருகே கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். எனவே, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது, தங்கள் பகுதியில் ஒரேயொரு சிறிய குடிநீர்த் தொட்டி மட்டுமே உள்ளதாகவும், அதிலும் கடந்த 2 மாதங்களாக முறையாக தண்ணீர் ஏற்றப்படுவதில்லை எனவும், குடிநீருக்காக வெகு தொலைவு அலைந்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், தங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தனிநபர்கள் திருடுவதாகவும், இது குறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம் முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
