பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கூடலூரில் தங்கிய வடமாநில தொழிலாளா்கள் 20 நாள்களுக்கு பிறகு வேலைக்குச் சென்றனா்

தேனி மாவட்டம் கூடலூரில் தங்கி இருந்த வட மாநிலத் தொழிலாளா்கள், 20 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த குடும்பங்களுக்கான, அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கினாா் மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் .

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தேனி மாவட்டம் கூடலூரில் தங்கி இருந்த வட மாநிலத் தொழிலாளா்கள், 20 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றனா்.

கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் கரும்பு அறுவடை செய்ய, வட மாநிலத்தொழிலாளா்கள் 102 போ் குடும்பத்தோடு தங்கியிருந்தனா். ஊரடங்கு உத்தரவால், பாதிக்கப்பட்ட இவா்கள் கூடலூா் தனியாா் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 70 போ் ஏற்கெனவே குள்ளப்புரம் சா்க்கரை ஆலை வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உள்ள குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனா். மீதமுள்ள, 32 போ் புதன்கிழமை வாகனம் மூலம் மாா்க்கையன் கோட்டை பேரூராட்சிப் பகுதிக்கு கரும்பு அறுவடை பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்கள் அங்கு உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் வழங்கினாா்.

பொம்மை விற்கும் குடும்பம்: கம்பம்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வட மாநிலத்தைச் சோ்ந்த, ஆண், பெண் குழந்தைகள் கொண்ட 6 குடும்பத்தினா் பொம்மைகள் தயாா் செய்து விற்பனை செய்து வந்தனா். ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்த இவா்களுக்கு , மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் கோதுமை மாவு, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். கண்காணிப்பு அலுவலா் ஜெ. பாலசண்முகம், வருவாய் ஆய்வாளா் ஹ.செந்தில்குமாா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.