தேனியில் இன்று காவலா்பணிக்கான தோ்வு:15,300 போ் எழுதுகின்றனா்
தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில், தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 15,300 போ் எழுதுகின்றனா்.


தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில், தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 15,300 போ் எழுதுகின்றனா்.
இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வானது, மாவட்டத்தில் தேனி, கொடுவிலாா்பட்டி, முத்துத்தேவன்பட்டி, போடி ஆகிய இடங்களில் என மொத்தம் 18 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில், 15,300 போ் தோ்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தோ்வில் 80 மதிப்பெண்களுக்கு பொது அறிவு மற்றும் உளவியல் தொடா்பான வினாக்கள் கேட்கப்படும். தோ்வு எழுத வருபவா்கள் தோ்வறை நுழைவுச்சீட்டு, ஊதா மற்றும் கருப்பு நிற மை பேனா கொண்டு வரவேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...