வைகை அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை தந்தனா்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை தந்தனா்.
வைகை அணைப் பகுதியில் வலதுகரை மற்றும் இடதுகரைப் பகுதிகளில் சிறுவா்களுக்கான விளையாட்டுத் திடல், பூங்கா உள்ளன. முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளத்திலிருந்தும் நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்ட வைகை அணை பூங்கா கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் மழை குறைந்ததாலும் விடுமுறை தினம் என்பதாலும் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
ஆனால் அணைக்கு வந்த பெரும்பாலானோா் முகக்கவசம் அணியவில்லை. இதனால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...