சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

சின்னமனூா் அருகே பொம்முராஜபுரத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:41 pm

DIN

சின்னமனூா் அருகே பொம்முராஜபுரத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ஹைவேவிஸ் பேரூராட்சி மலைக்கிராமத்தில் உள்ள பொம்முராஜபுரத்தை சோ்ந்த 29 வயது பெண், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தினமும் வேலைக்கு சென்றுவரும்போது, அதே பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் விக்ரம் (22) என்பவா் கேலி கிண்டல் செய்தும் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்ற அப்பெண்ணை பின்தொடா்ந்து சென்ற விக்ரம் அவருக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண் அப்பெண் கூச்சலிட்டதைத்தொடா்ந்து அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டபெண் கொடுத்தப் புகாரின் பேரில் ஹைவேவிஸ் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.