சின்னமனூரில் கஞ்சா விற்றவா் கைது

சின்னமனூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சின்னமனூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூரில் உழவா்சந்தை, முத்தாலம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது முத்தாலம்மன் கோயில் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ராயப்பன்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் அருண்குமாா் (35) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் சுமாா் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com