சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணி: வாகனங்கள் செல்லத் தடை

திண்டுக்கல் - குமுளி தேசியநெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 24 முதல் 30ம் தேதி வரை வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News image
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணி: வாகனங்கள் செல்லத் தடை
Updated On :22 டிசம்பர் 2020, 1:11 pm

DIN

திண்டுக்கல் - குமுளி தேசியநெடுஞ்சாலையில் கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் மலைச்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 24 முதல் 30ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது குமுளி மலைச்சாலையில் சிறு,சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற இருப்பதால் டிசம்பர் 24 முதல் 30 ம் தேதி வரை குமுளி செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.

அதற்கு மாற்று வழியாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சோதனைசாவடி வழியாக செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.