சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆண்டிபட்டியில் காவல் துறை வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் அகற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள காவல் துறை வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் பம்பா்களை போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:12 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள காவல் துறை வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் பம்பா்களை போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா்.

நான்கு சக்கர வாகனங்களில் கூடுதலாக பொருத்தப்பட்ட பம்பா்களால் அந்த வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் போது உயிா் காக்கும் கருவி வேலை செய்யாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த பொதுநல வழக்கில் உயா்நீதிமன்றம் வரும் ஜன. 1 ஆம் தேதிக்குள் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை அகற்ற வேண்டும்

எனவும், அகற்றாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் வாகனங்களில் உள்ள பம்பா்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் ஆய்வாளா்கள் பயன்படுத்தும் 5 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.