சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து நெரிசல்: கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையான கம்பம்மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கூடுதலாக காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லை.
Updated On :28 டிசம்பர் 2020, 8:49 am

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையான கம்பம்மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கூடுதலாக காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்வதற்கு கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய மலைச்சாலைகள் உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் திண்டுக்கல் குமுளிக்கு இடையே தேனி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த டிசம்பர். 24-ல் கம்பத்தில் இருந்து குமுளி வழியாக கேரம் செல்லும் மலைச்சாலையில் மூடப்பட்டது. 

மாற்று ஏற்பாடாக கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு மலைச்சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கம்பம்மெட்டு மலைச்சாலையில் வழக்கத்தைவிட அதிகமாக தோட்டத் தொழிலாளர்களை செல்லும் வாகனங்கள், சரக்கு, கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் அதிகமாக கேரளப் பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கும் தமிழகத்தில் இருந்து கேரள பகுதிக்கும் செல்கின்றது.

இதனால் கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் இருந்து மலைச்சாலை கொண்டை ஊசி வளைவுகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்பட்டு பயணம் தடைபடுகிறது. காவல்துறையினர் மலைச் சாலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் பாதுகாப்புச் செய்து, செல்கின்ற வாகனங்களை முறைப்படுத்தி அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கு கூடுதல் காவலர்களை மலைப்பாதையில் நியமிக்க மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.