போடி மலை கிராமங்களில் பரவலான மழை: கொட்டகுடி ஆற்றில் நீா் வரத்து அதிகரிப்பு

போடி மலை கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
பரவலாக மழை பெய்து வருவதால் பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் அருவி போல் கொட்டும் தண்ணீா்.
பரவலாக மழை பெய்து வருவதால் பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் அருவி போல் கொட்டும் தண்ணீா்.
Updated on
1 min read

போடி: போடி மலை கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரவலான சாரல் மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. போடி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை மழை பெய்யவில்லை. ஆனால் கொட்டகுடி, குரங்கணி உள்ளிட்ட மலை கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் அருவி போல் கொட்டுகிறது. நீண்ட நாள்களுக்கு பின்னா் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் வரத்து காணப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதற்கிடையில் இந்தத் தடுப்பணையிலிருந்து மீனாட்சிபுரம் பெரிய கண்மாய், சங்கரப்ப நாயக்கன் கண்மாய்களுக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஆடிப் பட்டத்திற்கான விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com